ப்ளீஸ்.. இரவில் போக்குவரத்தை தடைசெய்யுங்கள்.. பந்திப்பூர் காட்டிற்காக பொங்கி எழும் ஒரு குரல்!
மைசூர்: பந்திப்பூர் சாலை வழியாக இரவு நேரத்தில் வாகனங்களை இயக்குவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் சாலை வழிகளில் பந்திப்பூர் சாலை மிக முக்கியமானது ஆகும். மைசூரில் இருந்து வயநாட்டிற்கு இந்த சாலை செல்கிறது. இடையில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பந்திப்பூர் காடு வழியாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காடு பாதி கேரளாவிலும், பாதி கர்நாடகாவிலும் அமைந்துள்ளது. இங்கு இரவு நேரத்தில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும். விலங்குகள் பேருந்து, கார்களில் மோதி பலியாக கூடாது என்பதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும். ஆனால் தற்போது இந்த போக்குவரத்து நிறுத்தத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கூட பேருந்துகள் அனுமதிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிரபல பத்திரிகையாளரும், வனவிலங்கு பாதுகாப்பு நிபுணருமான ஜோசப் ஹூவர் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில், முக்கியமாக வயநாட்டில் இருக்கும் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
பந்திப்பூர் காட்டை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரவு நேரத்தில் பேருந்துகளை அனுமதிக்க கூடாது சாலையை மூட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதில் நிறைய முறையற்ற தன்மை நிகழ்ந்து வருகிறது. அடிக்கடி இந்த விதிகள் மீறப்படுகிறது. பந்திப்பூர் சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதேபோல் காலை நேரத்திலும் போக்குவரத்தை தடை செய்ய வழி இருக்கிறதா என்று பார்க்கும்படி கூறியது. ஆனால் இரண்டு மாநில எம்எல்ஏக்கள் சேர்ந்து ஆலோசனை செய்ததில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்தை தடை செய்யலாம் என்று முடிவானது. அதன்படி இரவு 9 முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 2009ல் இருந்தே இது அமலில் இருக்கிறது.
ஆனால் திடீர் என்று இதில் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. இதை சிலர் அரசியலாக்கி வருகிறார்கள். இரவு நேரத்தில் முறையற்று வாகனங்களை அனுப்பி வருகிறார்கள். நாம் இப்போது மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். நம்முடைய சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
கேரளாவில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது, நிலச்சரிவு ஏற்பட்டது, மக்கள் மரணம் அடைந்தனர். இதனால் நாம் இப்போதே காடுகளை பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நாம் விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் இந்த போராட்டங்களை யாரும் செவி மடுப்பதில்லை.
டிரான்ஸ்போர்ட் மாபியா, டிம்பர் மாபியா, மணல் மாபியா, கடத்தல் குழுக்கள் என்று பலர் இந்த பிரச்னைக்கு பின் இருக்கிறார்கள். 2009லேயே நாம் காட்டு வாழ் உயிரினங்கள் குறித்து பேசி இருக்கிறோம். ஆனால் இப்போது அதை கொஞ்சம் கொஞ்சமாக மீறி வருகிறோம்.
இரவில் அவசரத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு மாநிலங்களும் 8 பேருந்துகளை இந்த காடு வழியாக இயக்கி வருகிறது. ஆனாலும் விதிகளை மீறி பல வாகனங்கள் இரவு நேரத்தில் இங்கு இயக்கப்படுகிறது. நாம் ஏன் இந்த விதியை மீறுகிறோம். கேரள மக்கள் ஒழுங்காக இதை பின்பற்ற வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன்.
நாம் நம்முடைய இயற்கை அழிந்துபோகும் தருவாயில் இருக்கிறோம். நம்முடைய வானிலை மோசமாகி வருகிறது, வறுமையை, பஞ்சத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. நாம் இதற்காக போராடியது பலன் அளிக்கவில்லை. கேரள மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். அங்கு வெள்ளம் வந்த போதே அவர்கள் இதை உணர்ந்திருக்க வேண்டும்.
அரசியல் விளையாட்டில் தற்போது சுற்றுசூழல் பாதிக்கிறது. உலகம் முழுக்க சுற்றுசூழலை பாதுகாக்க மக்கள்போராடுகிறார்கள். விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். பலர் தற்கொலை செய்கிறார்கள். ஆகவே இதில் இன்னும் அரசியல் செய்யாமல் இந்த சாலை போக்குவரத்தை கேரளா மக்கள் உடனடியாக முறைப்படுத்த வேண்டும், என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications