ஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் குண்டர்களை வைத்து பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் கல்லுபாலம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு மார்த்தாண்டம் குளப்பாறை வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து தொடருந்து நிறுத்தாமல் செல்வதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவர்கள் பாதிப்பு உள்ளாவதால் இது குறித்து சில மாணவர்கள் அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அந்த பேருந்தில் பள்ளியின் அடுத்த நிறுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் ஏறியதாக கூறப்படுகிறது.
இடைகோடு மருத்துவமனை சந்திப்பு நிறுத்தில் பேருந்து வந்த போது நடத்துனர் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்தை அந்த பகுதியில் நிறுத்தவே அந்த பகுதியில் நின் ற சிலர் நடத்துனருடன் சேர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் எட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். படுகாயமடைந்த அபி, வைஷ்ணவ் , ஷாலு ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்னர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications