பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை.. காதலன் அதிரடி கைது.. காதலுக்கு உதவிய நண்பர்களையும் தூக்கிய போலீசார்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டார்.
காதலுக்கு உதவிய நண்பர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலை வளர்த்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் டோனிக் (22). இவருக்கும் வாணியகுடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

பாலியல் தொல்லை
இந்த நிலையில் ஆல்டோ மைக்கிள் டோனிக் தனது காதலியான அந்த மாணவியை நாகர்கோவில் அருகேயுள்ள உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

கைது செய்தனர்
இதையடுத்து மாணவியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆல்டோ மைக்கேல் டோனிக், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நண்பர்களும் சிக்கினர்
இந்த சம்பவத்தில் ஆல்டோ மைக்கேல் டோனியின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய 3 பேரும் ஆல்டோ மைக்கேல் டோனி காதலுக்கு உதவியது தெரிய வந்தது. இதனால் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்ப்பட்ட நான்கு பேரையும் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எச்சரிக்கையாக இருக்கணும்
இதற்கிடையே காதலனால் பாதிக்கப்பட்ட பிளஸ் 1 மாணவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். படிக்கும் பெண்கள் இதுபோல் ஏமாற்றி பெண்களை சீரழித்து வரும் கயவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications