நடிகர் மாரிமுத்து மீது திருச்செங்கோடு போலீசில் ஜோதிடர்கள் பரபரப்பு புகார்.. இன்ஸ்பெக்டர் அளித்த உறுதி
நாமக்கல்: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் முன்னேற அவரது உழைப்பும், திறமையும் தான் காரணம் என்று கூறியதுடன், ஜோதிடத்தால் அவர் இவ்வளவு உயரத்தை அடையவில்லை என்று நடிகர் மாரிமுத்து கூறியிருந்தார். அப்போது ஜோதிடர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருச்செங்கோடு காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகர் மாரிமுத்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பின்னர் ஏக பிரபலம் ஆனார். இந்த சீரியலில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார்.

எதிர் நீச்சல் சீரியலில் தமிழ் சீரியல்களில் மிகஉச்சகட்டவரவேற்பை பெற்றுள்ளது. மாரிமுத்து என்று சொல்வதை விட ஆவரை ஆதி குணசேகரன் என்ற அவரது கதாபாத்திரத்தை சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு பிரபலமாக உள்ளார்.
அண்மையில் ஜிதமிழ் தொலைக்காட்ச்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் vs மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியில் சந்திராஷ்டமம் அன்று செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அந்த நல்ல நாளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் விவாத்தின் போது கூறினார்கள்.
இதை கேட்டு கோபம் அடைந்த மாரிமுத்து ஜோதிடம் குறித்தும் ஜோதிடர்கள் குறித்தும் விமர்சித்தார். அப்போது அவர் கூறும் போது, சென்னையில் வெள்ளம் வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. ஸ்டாலின் முதல்வராகவே வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர் முதல்வராகி உள்ளார்.
ரஜினிகாந்த் பிறந்த நாளில் பிறந்த நொடியில் பல்லாயிரம் குழந்தைகள் பிறந்தன. ஆனால் ரஜினிகாந்த் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் ஆனார். அதற்கு அவரது கடின உழைப்பு தான் காரணம் என்றும் ஜோதிடம் காரணம் இல்லை என்றும் கூறினார்.
அப்போது ஜோதிடர்களுக்கும், நடிகர் மாரிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாரிமுத்துவின் பேச்சுக்கு ஜோதிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அண்மையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ. ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பல ஜோதிடர்கள் மாரிமுத்துவிற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஜோதிடர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் மாரிமுத்து பேசிவிட்டதாக குற்றம்சாட்டினார். அத்துடன் நடிகர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு கொடுத்தனர். புகார் மனுவை இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.. இந்த சம்பவத்தால் திருச்செங்கோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications