ஓட்டுக்கு வழங்க பதுக்கலா? நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. பரபர தகவல்
நாமக்கல்: நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பின்னணி பற்றிய முக்கிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக 24X7 என்ற அடிப்படையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாமக்கல் மோகனூர் அருகே காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் தேர்தலில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து காந்தி நகரை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரான சந்திரசேகரன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இவர் நாமக்கல்லில் கல்வி நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகவும், நிதி நிறுவனங்களின் பங்குதாரராகவும் உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று மதியம் 1 மணிக்கு சந்திரசேகரன் வீட்டில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வேளையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல் எஸ்பிஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. முதற்கட்ட தகவலின்படி அவரது வீட்டில் இருந்து ரூ.4.50 கோடி ரொக்கப்பணம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications