Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டுக்கு வழங்க பதுக்கலா? நாமக்கல் வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை எண்ணும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் பின்னணி பற்றிய முக்கிய விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முறைகேடு இன்றி அமைதியான முறையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

Lok Sabha Election 2024 Income Tax raid on Namakkal private Bus owner house and seized Rs 4 50 crore

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தொகுதி வாரியாக 24X7 என்ற அடிப்படையில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாமக்கல் மோகனூர் அருகே காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் தேர்தலில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காந்தி நகரை சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரான சந்திரசேகரன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இவர் நாமக்கல்லில் கல்வி நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகவும், நிதி நிறுவனங்களின் பங்குதாரராகவும் உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று மதியம் 1 மணிக்கு சந்திரசேகரன் வீட்டில் தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வேளையில் அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாமக்கல் எஸ்பிஐ வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் எண்ணும் பணி நடந்து வருகிறது. முதற்கட்ட தகவலின்படி அவரது வீட்டில் இருந்து ரூ.4.50 கோடி ரொக்கப்பணம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+