புலம்பெயர்ந்தவனாக சொல்கிறேன்.. சிஏஏ குறித்து மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா அதிரடி கருத்து
Recommended Video
நியூயார்க்: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாடெல்லா, வங்க தேசத்தில் இருந்து குடியேறிய அகதி ஒருவர், இந்தியாவின் அடுத்த யூனிகார்னை உருவாக்க உதவுவதற்கோ அல்லது இன்போசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக வருவதற்கோ விரும்புவதாகக் கூறியதாக தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடெல்லாவை மேற்கோள் காட்டி, ஆன்லைன் வலைத்தளமான BuzzfeedNews இன் தலைமை ஆசிரியர் பென் ஸ்மித் டுவிட்டர் பதிவு ஒன்றை திங்கள் அன்று வெளியிட்டார்.
அந்த பதிவினை சத்ய நாடெல்லாவின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பார்வை இது தான் என்று கூறி ஸ்மித் வெளியிட்டுள்ளார்.

இது மோசமானது
"இங்கே நடப்பது வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாக நான் நினைக்கிறேன் ... இது மோசமானது .... வங்கதேசத்தில் இருந்து அகதியாக குடியேறிய இந்தியர் ஒருவரை பார்த்தேன். அவர் இந்தியாவில் அடுத்த யுனிகார்னை உருவாக்க விரும்புவதாகவும் அல்லது இன்போசிஸின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வர விரும்புவதாகவும் கூறினார்" என நாடெல்லா தெரிவித்ததாக ஸ்மித்து குறிப்பிட்டுள்ளார். திங்கள்கிழமை காலை மன்ஹாட்டனில் நடந்த மைக்ரோசாஃப்ட் நிகழ்வில் பேசும் போது நாடெல்லா இந்த கருத்தை வெளிப்படுத்தியாக ஸ்மித் கூறினார்.
|
நாடெல்லாவுக்கு பாராட்டு
இந்த பதிவு வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு, பெங்களூரில் CAA க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது டுவிட்டரில, நதெல்லாவின் நிலைப்பாட்டைப் பாராட்டினார். "சத்ய நாடெல்லா தான் நினைப்பதை கூறியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இதை முதலில் சொல்ல எங்கள் சொந்த ஐடி ஜார்ஸில் ஒருவருக்கு தைரியமும் ஞானமும் இருந்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன் என்றார்.
|
இந்தியாவுக்கான நம்பிக்கை
நான் எனது இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன், ஒரு பன்முக கலாச்சார இந்தியாவில் வளர்ந்தேன். அமெரிக்காவில் எனது புலம்பெயர்ந்த அனுபவமும் உள்ளது. ஒரு புலம்பெயர்ந்தவர் ஒரு வளமான தொடக்கத்தைக் கண்டுபிடிக்க விரும்பலாம் அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பயனளிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த முடியும். இதுவே இந்தியாவுக்கான எனது நம்பிக்கை" என்று தெரிவித்துள்ளார்.
|
பாசிச நடவடிக்கை
முன்னதாக கூகுள், பேஸ்புக், உபெர் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணிபுரியம் 150 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐடி பணியாளர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும்,, நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் திறந்த கடிதம் எழுதி இருந்தனர். மத்திய அரசின் இந்த இரண்டு முயற்சிகளையும் "பாசிச" நடவடிக்கை என்று விமர்சித்து இருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications