எங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை
இந்தியா மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
நியூயார்க்: இந்தியா மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனாவிற்கு எதிராக இதை பயன்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
Recommended Video
கொரோனா காரணமாக உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது அமெரிக்காதான். உலகம் முழுக்க கொரோனா காரணமாக 1,201,473 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 311,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு 8452 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாட்டு தலைவர்களிடம் ஆலோசனை செய்துவருகிறார். நேற்று இந்திய பிரதமர் மோடி உடன், தொலைபேசியில் ஆலோசனை செய்தார்.

டிரம்ப் பேட்டி
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் மோடி உடன் அவர் தொலைபேசியில் பேசியது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில், இந்திய பிரதமர் மோடி உடன் நான் இன்று தொலைபேசியில் பேசினேன். கொரோனாவிற்கு எதிராக இணைந்து போரிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரண்டு நாடுகளும் பரஸ்பரம் உதவிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். நாங்கள் இணைந்து போராடுவோம்.

டிரம்ப் கோரிக்கை
இந்தியாவில் மலேரியாவை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உள்ளது. அவர்கள்தான் உலகில் மிக அதிகமாக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை உற்பத்தி செய்வது. அவர்களிடம் 1.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்து கூறியுள்ளோம். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய சொல்லி இருக்கிறேன்.

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து
நாங்கள் ஆர்டர் செய்த மருந்துகளை எங்களுக்கு இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இந்திய அரசு இதை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை கொரோனாவிற்கு பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் என்பது மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்து ஆகும்.

மலேரியாவிற்கு சிகிச்சை
இதற்கு முன் எபோலாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்பட்டது. கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இதை அதிகம் பயன்படுத்தினால் அது உயிருக்கே கூட பாதிப்பு ஏற்படுத்தும். சில நாடுகளில் இந்த மருந்துகளை பயன்படுத்த அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications