பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த 14 வயது மாணவன்! சரமாரியாக சுட்டதில் 4 பேர் பலி! அமெரிக்காவில் ஷாக்
நியூயார்க்: அமெரிக்காவில், 14 வயது மாணவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.
அமெரிக்காவில் ஏறத்தாழ எல்லோரிடமும் துப்பாக்கி இருக்கும். ஒரு ஆய்வில் வெறும் 10 சதவிகிதமானவர்கள் மட்டுமே துப்பாக்கியை வைத்திருப்பதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும், இந்த 10% பேர், துப்பாக்கி உள்ள வீட்டில் வசிக்கிறார்கள். அப்படியெனில் அமெரிக்காவில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அளவுக்கு அதிகமான ஆயுதங்கள் தொடர்ந்து வன்முறையை ஊக்குவித்து வருகின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடத்திருக்கிறது. 14 வயது மாணவர் ஒருவர், திடீரென சக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளார். இதில் 2 மாணவர்கள் மீதும், 2 ஆசிரியர்கள் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. இவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். அதேபோல, 9 பேர் குண்டு பாய்ந்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
14 வயது மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது? அதை எப்படி அந்த மாணவரால் இயக்க முடிந்தது? அவருக்கு யார் சொல்லி கொடுத்தது? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன. இந்த மாணவர் கடந்த ஆண்டு, பள்ளிக்கு துப்பாக்கிச்சூடு மிரட்டல் விடுத்திருந்தார். அவரை போலீசார் அழைத்து எச்சரித்திருந்தனர். இப்படி இருக்கையில் இந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இந்த மாணவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு இது 16ஆக இருந்தது. ஆனால் 2023ல் 57ஆக உயர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு இன்றைய தேதி வரை பள்ளிகளில் 46 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த ஆண்டில் இதுவரை நடந்த பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில், 50 பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications