Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னைக்குதான் கடைசி நாளா? பூமியை நெருக்கமாக கடந்து செல்லும் 3 விண்கற்கள்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: விண்கற்களால் பூமிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இன்று பூமியை நெருக்கமாக 3 விண்கற்கள் கடந்து செல்ல இருப்பதாக நாசா எச்சரித்துள்ளது. ஒருவேளை இந்த விண்கற்கள் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

asteroid meteor space

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்களால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கற்கள் மூன்று கடந்து செல்ல இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது.

2024 QU, 2024 QE2 மற்றும் 2024 RB எனும் பெயர் கொண்ட விண்கற்கள்தான் இன்று பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதில் '2024 QU' எனும் விண்கல்தான் மிகப் பெரியது. சுமார் 120 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், பூமியை 28 லட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது. இது ரொம்ப தூரமாக தெரியலாம். ஆனால், பூமிக்கும் அடுத்து உள்ள கோளுக்கும் இடைப்பட்ட தூரத்தை விட இது குறைவுதான்.

இப்படி இருக்கையில் விண்கல்லின் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட, அது பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்த விண்கல் பூமியில் மோதினால், 10 அணு குண்டு ஒரே நேரத்தில் வெடித்தால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுமோ, அதை இது ஏற்படுத்தும். மட்டுமல்லாது இந்த விண்கல் விழுந்த இடத்தில் 2 கி.மீ விட்டத்திலும், 660 மீ ஆழத்திலும் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும்.

விண்கல் விழுந்த இடத்திலிருந்து 200 கி.மீ வரை ரிக்டர் 7 அளவில் நிலநடுக்கம் ஏற்படும். மட்டுமல்லாது இது விழுந்த இடத்தை சுற்றி 10 கி.மீக்கு எந்த கட்டிடங்களும் இருக்காது. ஒருவேளை இது கடலில் விழுந்தால், விழுந்த இடத்திலிருந்து 500 கி.மீ பரப்பளவு உள்ள பகுதிகள் கடுமையான சுனாமியால் பாதிக்கப்படும்.

இந்த விண்கல்லை தவிர மற்ற இரண்டு விண்கல்லும் 30-36 அடி அளவில்தான் இருக்கும். எனவே, பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+