துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து?
நியூயார்க்: ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா தனது இலக்கை நெருங்கி விட்டதாகவும், தேவையானால் மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்த தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது அவர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க வான் படைத தளங்களுக்கு அனுமதி அளித்து வரும் கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பதற்றத்தில் உள்ளன.
டொனால்ட் டிரம்ப்
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் வேகமாக முன்னேறி வருவதாகவும், முக்கிய இலக்குகளை அடைந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறி உள்ளார். வெளை மாளிகையில் பேசிய அவர்," ஆரம்பத்தில் திட்டமிட்டபடியே இந்த போரில் அமெரிக்க படைகள் செயல்பட்டு வருகிறது. தேவையானால் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவோம். தற்போது அமெரிக்க படைகள் போரில் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரானுக்கு எச்சரிக்கை
எதிரிகள் பலவீனமடைந்து வருகின்றனர். இதனால், இந்த போரின் முடிவு விரைவில் அமெரிக்காவுக்கு சாதகமாக அமையும். ஈரானின் ராணுவ திறன்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படை அமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளது. மேலும், ஏவுகணை தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மத்திய கிழக்கு
இந்த போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நன்றி . குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் வழங்கிய ஆதரவு இந்த போரில் முக்கிய பங்காற்றியது. அதே நேரத்தில், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு கதவுகள் திறந்த நிலையில் தான் உள்ளது. ஆனால் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால், ஈரானின் முக்கிய மின்சார உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்த தயார் நிலையில் அமெரிக்கா உள்ளது.
அயத்துல்லா அலி காமேனி
கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா, ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தரப்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த போரின் தாக்கம் உலகளாவிய அளவிலும் உணரப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை
குறிப்பாக உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் பயணிப்பதால், அதன் மூடல் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications