ஒரு மணிநேரமாக சுயநினைவிழந்த டிரைவர்.. நெஞ்சில் அடித்து உயிர் கொடுத்த நீலகிரி இன்ஸ்பெக்டர்- வீடியோ
நீலகிரி : நீலகிரியில் இருந்து கேரளாவுக்கு காய்கறி ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனம் விபத்துக்குள்ளான ஒரு மணி நேரமாக சுயநினைவை இழந்த ஓட்டுநருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை செய்து மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் அபிலாஷ். இவர் நேற்று முன் தினம் மாலை ஊட்டியிலிருந்து கேரட் உள்ளிட்ட காய்கறிகளை மலையிலிருந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தார்.
அப்போது கீழ்நாடுகாணி வழியாக கேரளா மாநிலம் வயநாடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார்.
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. காய்கறி & மளிகை கடைகளுக்குகூட தடை விதிக்கப்பட்டது ஏன்?
காய்கறி
அப்போது தமிழக எல்லைப் பகுதியான கீழ்நாடுகாணி அருகே காய்கறி ஏற்றிச் சென்ற வாகனம் சென்ற போது எதிர்பாராவிதமாக வாகனம் விபத்துக்குள்ளாகி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் வாகன ஓட்டுநர் அபிலாஷ், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.
ஒரு மணி நேரம்
இதனால் மூச்சு பேச்சில்லாமல் ஒரு மணி நேரமாக சாலையில் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சுயநினைவை இழந்த நிலையில் மயங்கிய நிலையில் அபிலாஷ் இருந்தார். இதை பார்த்த காவல் துறை ஆய்வாளர் சத்தியமூர்த்தியும் அப்பகுதி வாகன ஓட்டுநர் மரக்காணமும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
சுயநினைவை இழந்த அபிலாஷ்
அப்போது சுயநினைவை இழந்து கிடந்த அபிலாஷை சத்தியமூர்த்தியும் மரக்காணமும் நன்கு மார்பு பகுதியில் அழுத்தம் கொடுத்தனர். அதாவது சிபிஆர் முறைப்படி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அபிலாஷுக்கு சுயநினைவு வந்தது.
வைரல்
இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறந்ததாக கருதப்பட்ட ஓட்டுநரை உயிர் பிழைக்க வைத்த காவல் ஆய்வாளர் சத்திய மூர்த்திக்கும் வாகன ஓட்டுநர் மரக்காணத்திற்கும் பாராட்டுகள் குவிகின்றன.