தேர்தல் முடிவுகள் என்ன வந்தாலும் சரி.. ஆதரவாளர்கள் அத்துமீற கூடாது.. தேஜஸ்வி யாதவ் அட்வைஸ்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் என்ன வந்தாலும் தனது ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றால் பட்டாசுகளை வெடிப்பதோ, ரவுடி போல் செயல்படுவதோ கூடாது. எதிர்க்கட்சிகளிடம் நாகரீகத்தை பேணி காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பீகாரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பாஜக, ஜேடியு ஒரு அணியாகவும், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் செயல்படுகிறது. இந்த தேர்தலில் முந்தைய கருத்துக் கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக் கணிப்பிலும் சரி தேஜஸ்வி யாதவிற்கு சாதகமாகவே முடிவுகள் வந்துள்ளன.
இந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நவம்பர் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் முடிவுகள் என்னவாக இருந்தாலும் நாம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
கட்சியினர் யாரும் நிறங்களை பயன்படுத்துவதோ பட்டாசுகளை வெடிப்பதோ கூடாது. வெற்றியை கொண்டாடும் போது எந்தவிதமான ஒழுக்கமற்ற சம்பவங்களும் நடைபெறக் கூடாது என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications