"மார்பகங்களை" பிளந்து.. காது, கைகளை கண்டந்துண்டமாக்கிய காமுகன்.. கண்ணை உறுத்திய அழகு.. மார்க்கெட்டில்
பெண்ணை மார்க்கெட்டில் வெட்டி கொன்ற நபர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது
பாட்னா: டெல்லியில் மார்க்கெட் பகுதியில் பெண்ணை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு வலை வீசப்பட்டுள்ள நிலையில், அந்த கொலை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில், ஸோட்டி டெயிலோரி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் நீலம் யாதவ்.. 42 வயதாகிறது..
இவரது கணவர் பெயர் அஷோக் யாதவ்... நீலம் தேவி கடந்த சனிக்கிழமை, வழக்கம்போல் பக்கத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.. சில பொருட்களை நீலம் வாங்கி கொண்டிருந்தபோது, மார்க்கெட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துவிட்டார்.
ஷ்ரத்தா கொலை வழக்கு.. நார்கோ டெஸ்டில் டாக்டர்களையே முட்டாளாக்க நினைத்த அப்தாப்
மார்பகம்
காய்கறி வாங்குவதை போல நடித்து, நீலம் தேவியின் அருகில் வந்தவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார்.. ஆனால், நீலம்தேவியின் மார்பகம், கைகள், கால்கள், காதுகள் என தனித்தனியாக நின்று நிதானமாக வெட்டினார்.. நீலம் தேவி அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அடையாளம் கண்டுபிடித்து, உடனடியாக அவரது கணவர் அசோக் யாதவிடம் தெரிவித்தனர்..
மார்க்கெட்டிலேயே
பிறகு, அவரை மாயாகஞ்ச் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு தூக்கி சென்றனர்.. ஆனால், நீலம்தேவியின் உயிர் மார்க்கெட்டிலேயே பிரிந்துவிட்டதாக சொன்னார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், அந்த பெண்ணை வெட்டியது முகமது ஷகீல் என்ற விவரம் தெரியவந்தது. நீலம் யாதவின் கணவர் அசோக்கும், முகமது ஷகீலும் நெருங்கிய நண்பர்களாம்.. ஆனால், ஷகீலின் நடவடிக்கை நாளுக்கு நாள் சரியில்லாமல் இருந்துள்ளது..
தப்பான பார்வை
அதனால் தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என்று ஷகீலிடம் அசோக் சொல்லி உள்ளார்.. இந்த ஆத்திரத்தில்தான், நண்பரின் மனைவி நீலம் யாதவை கடந்த சனிக்கிழமை கொன்றதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. இந்த சம்பவம் தொடர்பாக பாகல்பூர் போலீசார், முகமது ஷகீலின் சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.. ஆனால், முக்கிய குற்றவாளியான ஷகீல் தலைமறைவாகவே உள்ளதால், அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்...
மார்பகம்
தற்போது இந்த கொலை குறித்து, மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது.. நீலம் கணவர் அசோக் சொல்லும்போது, "முகமது ஷகீல் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான் வசித்து வருகிறான்.. அங்கேயே அவருக்கு ஒரு தோட்டமும் உள்ளது.. அந்த தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்... அதனால் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக வைத்திருந்தார்.. ஆனால் என்னுடைய மனைவியை தப்பான கண்ணோட்டத்தில் அவர் பார்த்தார்.. தவறான எண்ணம் அவருக்கு இருந்ததால், ஷகீலை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கண்டிப்புடன் சொன்னேன்..
ஆட்டோக்கள்
அந்த ஆத்திரத்தில்தான் என்னுடைய மனைவியை கொலை செய்திருக்கலாம்.. மற்றபடி எங்களுக்குள் எந்த முன்விரோதமும் தகராறும் இல்லை.. வீட்டுக்கு வராதே என்றுதான் சொன்னேன்.. என்றார் அசோக் யாதவ். அதுமட்டுமல்ல, எப்போதுமே நீலம் தேவி மார்க்கெட்டுக்கு சென்றால், ஆட்டோவில்தான் சென்று வருவாராம்.. ஆனால், அன்றைய தினம் ஆட்டோக்கள் அந்த பகுதியில் இல்லாததால், நடந்து செல்ல முடிவு செய்திருந்தாராம்..
மார்பகங்கள்
தனியாக நீலம்தேவி இருப்பதை பார்த்துதான், ஷகீல் கூர்மையான ஆயுதத்தால் அவளை சரமாரியாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.. ஆனால், நீலம்தேவியை கொலை செய்வது என்று முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருந்தாராம்.. அதனால்தான், ஒரு பானைக்குள் ஆடு வெட்டும் கத்தியை மறைத்து வைத்திருந்ததாக சொல்கிறார்கள்.. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொடூர கொலைகள் அச்சத்தை ஊட்டி வருகின்றன.. அதிலும் டெல்லி நாளுக்கு நாள் பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது.