தமிழக கட்சிகள் கற்க வேண்டிய பாடம்.. எழுந்த பெண்களின் எழுச்சி.. நிதீஷ் குமாருக்கு புரிந்திருக்கும்!
பாட்னா: பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களிக்காத காரணத்தால் அந்த கட்சி 43 இடங்களாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரை மது இல்லாத மாநிலமாக மாற்றவேன் என்ற அறிவித்த காரணத்தால் தான் 2015ல் நிதீஷ்குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி பெறும் வெற்றி பெற்றது பெண்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். ஆனால் இந்த முறை அதே மது விற்பனையே அவர் கடந்த முறையை விட இம்முறை 28 இடங்களை இழக்க காரணமாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முசாபர்பூரில் ஒரு பெண் வாக்காளர் கூறுகையில், "மது இன்னும் சட்டவிரோதமாக பீகாரில் விற்பனை செய்யப்படுகிறது. அதை விற்பவர்கள் நாளுக்கு நாள் செழிப்பாகி வருகிறார்கள், அதை உட்கொள்பவர்கள் நாசமாகி வருகிறார்கள். பேரழிவு வருகிறது.. காவல்துறையினரும் இதில் கூட்டணி.. அவர்கள் மதுவை விற்க அனுமதிக்கிறார்கள். என் மகன் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே வீணடிக்கிறான். மதுவுக்கு தடை எல்லாம் இங்கு இல்லை" என்றார் வேதனையுடன்.

2015 தேர்தல் மாற்றம்
2015 ஆம் ஆண்டில், பீகார் தேர்தல்களில் 1962 க்குப் பிறகு அதிக பெண்கள் திரண்டு வந்து வாக்குகளை பதிவு செய்தது அப்போது தான் முதல்முறை. அப்போது வாக்களித்த பெண்களின் சதவீதம் 60.48 ஆக இருந்தது. ஆனால் ஆண்கள் சதவீதம் 53.32 மட்டுமே. நிதீஷ் குமாருக்கு ஆதரவாக பெண்கள் 7 சதவிகித வாக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அப்போது நிபுணர்கள் கூறினார்கள்.

கோபம் அடைந்த பெண்கள்
ஆனால் இந்த முறை சட்டவிரோத மதுவிற்பனையால் கோபம் அடைந்த பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் விருப்பப்படி ஓட்டுகளை மாற்றி போட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக பெண் வாக்காளர் ஒருவர் கூறுகையில் "எனது மகன் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறார்களோ, நான் வாக்களிப்பேன். எங்கள் குடும்பத்திற்கு 40 வாக்குகள் உள்ளன, நாங்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு வாக்களித்தோம்" என்றார்.

மதுவிலக்கு மோசமான விஷயம்
தேர்தலில் வாக்களிக்கும் விஷயத்தில், பெண்கள், பிள்ளைகள் மற்றும் கணவரின் தேர்வுகளுக்கு பிரதிபலிக்கிறார்கள். தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவாக இளைஞர்கள் உருவெடுத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், ஆண்கள் மதுவிலக்கை மிகவும் மோசமாகவே பார்த்திருக்கிறார்கள். மேலும், வேலையின்மை மற்றும் தொடர்ந்து தொற்றுநோயிலிருந்து பெருகிவரும் விரக்தியுடன், அவர்கள் அவருக்கு எதிராக சாய்ந்திருக்கலாம். மேலும், வீட்டு வன்முறை, குற்றம் மற்றும் வறுமை ஆகியவற்றைக் குறைப்பதில் மதுவிலக்கின் தாக்கம் ஊக்கமளிக்கவில்லை.

400 சதவீத லாபம்
கடந்த ஆண்டு இந்திய மது பான நிறுவனங்களின் கூட்டமைப்பு, பீகார் போலிஸ், தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றின் தரவை மேற்கோள் காட்டி பீகார் அரசுக்கு பீகாரில் மதுபானத் தடை குற்றங்களைக் குறைக்கவில்லை என்று கூறியது. மேலும் மதுவிற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக விற்பனை உயர்ந்துள்ளது. 400 சதவீத லாப வரம்பை விற்பவர்கள் பெற்றிருக்கிறாரகள். சக்திவாய்ந்த மதுபான மாஃபியாவின் எழுச்சிக்கே வழிவகுத்தது என்றார்கள்.

மதுவே பிரதான பிரச்சனை
மாநிலத்தின் மற்றொரு பெண் வாக்காளர் நிதீஷ்க்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று கூறுகையில், "பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளன. என் கணவரும் மகனும் ரூ .300 சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள், அதையெல்லாம் மதுவில் வீணாக்குகிறார்கள். இதன் காரணமாக நான் தினமும் அழுகிறேன், நாங்கள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். கடைசியாக நாங்கள் ஏதாவது செய்வோம் என்று நினைத்து நிதீஷ் குமாருக்கு வாக்களித்தோம், ஆனால் நடந்ததெல்லாம் மேலும் பணவீக்கம் மற்றும் எங்கள் அன்றாட வாழ்க்கை பாழாகிவிட்டது. " என்றார்.

குற்றங்கள் அதிகரிப்பு
2016 ஆம் ஆண்டின் பொருளாதார கணக்கெடுப்பின்படி, பீகார் 2014-15 ஆம் ஆண்டில் கலால் வரி மூலம் மதுபான விற்பனையிலிருந்து ரூ .3,100 கோடிக்கு மேல் சம்பாதித்தது. 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடு 4,000 கோடி ரூபாய் என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையின்படி, அப்போதிருந்து, அரசு "மது விற்பனையிலிருந்து கிடைக்கும் அனைத்து வருவாயையும் இழந்து வருகிறது". ஆல்கஹால் தடை செய்யப்பட்டதிலிருந்து, போலி மதுபானம் மற்றும் போதைப்பொருள் காரணமாக இறப்புகள் பீகாரில் அதிகரித்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு
ஆவணங்களில் உள்ளபடி, மது தடை செய்யப்பட்டதிலிருந்து, போதைப்பொருளுக்கு சிகிச்சையளிக்க வந்த போதை நபர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் இரட்டிப்பாகியது. இதனிடையே பீகாரில் நிதீஷ்க்கு இந்த முறை மக்கள் வாக்களிக்க மறுத்ததற்கு காரணம் கொரோனா ஊரடங்கு. மக்கள் கடும் துன்பத்தை சந்தித்ததால் அவருக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பலர் வேறு கட்சிகளுக்கு ஓட்டை மாற்றி போட்டுள்ளனர் இதுவும் அதிக பெண்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கிய காரணம். வறுமை, மதுவிற்பனை ஆகியவையே நிதீஷ்குமாருக்கு இந்த முறை அதிகம் வாக்குகள் விழாமல் போக காரணம். ஓட்டுக்களை சிராக் பஸ்வானும், ஓவைசியும் பிரித்த காரணத்தால் பாஜக கூட்டணி வென்றுள்ளது. இல்லாவிட்டால் தோல்வி கிடைத்திருக்கும். எனவே மதுவிற்பனையும், வறுமையையும் நிதீஷின் முதல்வர் கனவை காலி செய்துள்ளன என்பதை தமிழகத்தை ஆளும், ஆளவிரும்பும் கட்சிகள் புரிந்து கொண்டால் சரி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications