ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்து விட்டது.. புதுச்சேரியில் அப்சரா ரெட்டி பிரச்சாரம்
Recommended Video

புதுச்சேரி: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நேரம் நெருங்கி விட்டது என்று மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தில் முதலமைச்சர் நாராயணசாமியின் மகள் விஜயகுமாரி, மகிளா காங்கிரஸார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய அப்சரா ரெட்டி பேசுகையில், ஜாதி, மதம் பாராமல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரே தலைவர் ராகுல்காந்தி. மதவெறி பிடித்த பாஜகவை அகற்றி மனித நேயம் தழைக்க கூடிய தேர்தல் இது.


விலைவாசி வாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டியிலிருந்து மக்களை காக்க கூடிய தேர்தல் இது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மானங்கெட்ட முதலமைச்சராக உள்ளார். பாஜகவின் அடிமை அரசு தமிழகத்தில் உள்ளது.

மத்தியில் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக ஆவதற்கான நேரம் வந்துவிட்டதாக அப்சரா ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications