அப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு
புதுச்சேரி: கேரளாவில் பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாடராஜன் (52). இவர் கேரளா மாநிலம் குருவாயூரில் கூலி வேலை செய்துவந்துள்ளார். நடராஜனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக காய்ச்சல் ஏற்பட்டதால், சொந்த ஊரான கடலூருக்கு திரும்பியுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்ததால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடராஜனின் இரத்த மாதிரிகளை பூனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு நிபா வைரஸ் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனை அனுப்பியிருந்த நிலையில், நடராஜனுக்கு நிபா வைரஸ் தாக்கவில்லை என புனேவிலிருந்து சோதனை முடிவுகள் வந்துள்ளன.
இந்த சோதனை முடிவின் மூலம் கடந்த இரண்டு நாட்களாக நிபா வைரஸ் தாக்குதல் குறித்து பீதியடைந்திருந்த புதுச்சேரி மற்றும் கடலூர் மக்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே, நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும்.

மேலும், நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications