"அனைத்திலும் அரசியல் என்றால்.. நல்லுறவுடன் இருக்க முடியாது" சொல்கிறார் ஆளுநர் தமிழிசை.. என்னாச்சு
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து இருந்த நிலையில், இது தொடர்பாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களிலும் மாநில அரசுக்கும் சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.

தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தது

தேநீர் விருந்து
அதேநேரம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் தேநீர் விருந்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்திருந்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

புதுச்சேரி
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது. இதையடுத்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன. அதேநேரம் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

அரசியலாக்க வேண்டாம்
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், "ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல. அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications