புதுச்சேரியை கலக்கிய 'பிரியாணி'.. யாரு அந்த ஆபிசர்.. சொந்த ஊரையே நெகிழ வச்சிட்டாரே
புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த பண்டைய பூரநல்லூர் கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஊக்கப்பரிசு வழங்கி கௌரவித்தார். அத்துடன் அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து மகிழ்வித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அரசு பள்ளியில் படித்த ஏழை மாணவ, மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். கூலி வேலைக்கு செல்வோரின் பிள்ளைகள், ஆட்டோ ஓட்டுநரின் பிள்ளைகள், விவசாய வேலை செய்வோரின் பிளைகள் பலர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் மதிப்பெண் பெறுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி கௌரவிப்பது, பாராட்டுவது போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. பள்ளி அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் பரிசு வழங்கி கௌரவித்து வருகின்றன. இவை எல்லாம் இயல்பாக நடக்கும் நிகழ்வுகள் தான்.
ஆனால் புதுச்சேரி அருகே தனது கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் நேரில் அழைத்து விருந்து வைத்ததுடன், ஊக்கப்பரிசு அளித்து கௌரவித்துள்ளார்.

புதுச்சேரியை அடுத்த பண்டைய பூரநல்லூர் கிராமத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை உதவி ஆய்வாளர் இளங்கோ ஊக்கப்பரிசு வழங்கினார்.
தனது கிராமத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை ஒரு திருமண மண்டபத்தில் அழைத்து, அவர்களின் சாதனையை உயர்வாக பேசிய உதவி ஆய்வாளர் இளங்கோ, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உற்சாகமூட்டினார். பின்னர் மாணவ மாணவிகளை கௌரவித்ததுடன், இறுதியாக அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். இதனை பார்த்த ஊர் மக்கள் காவல் உதவி ஆய்வாளரை வெகுவாக பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications