புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு... எதற்கெல்லாம் தடை? ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடி
புதுவை: கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வார இறுதி நாட்களில் முழுவ ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக துணை நிலை ஆளுநர்
தமிழிசை செளந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதுவையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர்நிலைக் கூட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன

வார இறுதி நாட்களில் ஊரடங்கு
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் கடைகள் பகல் 2.00 மணி மட்டுமே இயங்க வேண்டும். அத்தியாவசிய கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் 2.00 மணிக்குப் பிறகு, உணவு விடுதிகளில் பார்செல்கள்மட்டும் அனுமதிக்கப்படும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுவர்.

மருந்துகள் கொள்முதல்
எதிர்வரும் கொரோனா சுழலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, தேவையான இடங்களை கொரோனா பாதுகாப்பு மையங்களாக மாற்றுவது, போதிய அளவு மருந்துகளைக் கையிருப்பில் வைப்பது, கூடுதலாக உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவற்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்தல் செய்ய வேண்டும். RT PCR கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

ஆக்சிஜன் சிலிண்டர்கள்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் ஆக்சிஜனை வழங்குவதை ஒழுங்குபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காகத் தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும்,கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

புதிய கட்டுப்பாடுகள்
அறிகுறிகள் காணப்படும் நபர்களை பரிசோதனை செய்த பின்னர், மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது. கொரோனா வழிமுறைகளோடு மத வழிபாடுகள் அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்" என்று புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications