தவாக மாவட்ட செயலாளர் கொலையில் பாமக மா.செ உள்ளிட்ட 4 பேர் சரண்! அப்பா கொலைக்கு பழிக்குப் பழி!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 4 பேர் சரண் அடைந்துள்ளனர்.

பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Leader Manimaran Murder PMK District Secretary Three Others Surrender

காரைக்​கால் திருநள்​ளாறைச் சேர்ந்​தவர் மணி​மாறன் ​(32). தமிழக வாழ்வுரிமைக் கட்​சி​யின் காரைக்கால் மாவட்​டச் செயலாள​ரான இவர், மயி​லாடு​துறை​யில் நேற்று முன்தினம் நடை​பெற்ற கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​றார். பின்​னர், பிற்​பகலில் காரில் காரைக்​கால் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தார். செம்​ப​னார்​கோ​வில் காலஹஸ்​தி​னாத​புரம் பகு​தி​யில் உள்ள பள்ளி அருகே சென்​ற​போது, பின்​னால் 2 கார்​களில் வந்த சிலர், அவரது காரை வழிமறித்து நிறுத்​தி​யுள்​ளனர்.

பின்​னர் கார் கண்​ணாடியை உடைத்து மணி​மாறனை வெளி​யில் இழுத்துப் ​போட்​டு, அரி​வாள் உள்​ளிட்ட ஆயுதங்​களால் அவரை சரமாரி​யாக வெட்​டிக் கொன்​று​விட்​டு, அவர்​கள் வந்த கார்​களில் ஏறி தப்​பிச் சென்​று​விட்​டனர். தகவலறிந்து வந்த செம்​ப​னார்​கோ​வில் போலீ​சார் மணிமாறனின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக மயி​லாடு​துறை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தொடர்ந்​து, மயி​லாடு​துறை எஸ்​.பி. ஸ்டா​லின் சம்பவ இடத்​தில் விசா​ரணை மேற்​கொண்​டார். குற்​ற​வாளி​களைப் பிடிக்க 5 தனிப்​படைகள் அமைக்​கப்பட்​டன. முதற்கட்ட விசாரணையில் பாமக காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்த தேவமணி கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக தகவல் வெளியானது.

மணிமாறனின் கொலையில் சிலர் மீது சந்தேகம் உள்ளது எனவும் அவரது அண்ணன் காளிதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் காரைக்கால் பகுதியை சேர்ந்த தேவமணியின் மகன்கள் பிரபாகரன், அருள் குமார், தேவமணியின் மைத்துனர் ராமமூர்த்தி மற்றும் புருசோத்தமன், முட்டை முருகன் என்ற ஐந்து பேர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி காரைக்​கால் மாவட்ட பாமக செய​லா​ள​ராக இருந்த தேவ​மணி என்​பவர் வெட்​டிக் கொலை செய்யப்​பட்ட வழக்​கில் மணி​மாறன் முக்​கியக் குற்​ற​வாளி​யாக இருந்​தார். தற்​போது அவர் ஜாமீனில் வந்​திருந்​தார். எனவே, அந்​தக் கொலைக்கு பழிக்​குப் பழி வாங்​கும் வகை​யில் இந்தக் கொலை நடந்​ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கல் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 4 பேர் சரண் அடைந்துள்ளனர். பாமக மாவட்டச் செயலாளர் பிரபாகரன் உள்பட 3 பேரிடமும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+