தமிழக மீனவர்கள் 13 பேர் விசைப்படகுடன் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 13 பேரை விசைப்படகுடன் சிறை பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்ள் 13 பேரை கைது செய்துள்ளனர். ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு விசைப்படகையும் சிறைப்பிடித்தனர்.
கைது செய்யப்படுவதில் இருந்து தப்பி செல்ல முயன்றதாக இரு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
அண்மையில்தான் தமிழகத்தை சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்தியதாக அறிவித்த நிலையில் மீண்டும் 13 பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications