வங்கியிருந்து வந்த நோட்டீஸ்.. மயங்காத குறையாக குழம்பிய மரிய குழந்தையின் மகன்.. காரணம் இதுதான்!
திருவாடானை எஸ்பிஐ அனுப்பிய நோட்டீஸால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Recommended Video

திருவாடானை: செத்து போனவர்களின் பெயர்களில் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் திருவாடானை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
திருவாடானையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையில் இருந்து சின்னகீரமங்கலத்தைச் சேர்ந்த மரியகுழந்தை என்பவருக்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அதை மரியகுழந்தையின் மகன் வாங்கி படித்து பார்த்தார். பிறகு ஷாக்கில் உறைந்து நின்றார்.
ஏனென்றால் மரியகுழந்தை இறந்து 5 வருஷம் ஆகுதாம். அவர் சாகிறவரை யார்கிட்டயும், எதுக்காகவும் கடனே வாங்கியது கிடையாதாம். ஆனால் வங்கியில் லோன் வாங்கியதாகவும், அதை வட்டியுடன் கட்ட வேண்டும் என்றும் நோட்டீஸ் வந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.

மாரியம்மாள்
இதேபோல மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது. மாரியம்மாள் பல லட்சம் வாங்கி இருப்பதாகவும், கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. மாரியம்மாள் செத்து பல வருஷம் ஆகிவிட்டதாம்.

டென்ஷன் ஆகும் மக்கள்
நோட்டீசை பார்த்தவர்களுக்கு இதயமே நின்று போனது போல ஆகிவிட்டது. இப்படியே திருவாடானை பகுதிகளில் நிறைய பேருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. வாங்காத கடனுக்கு மட்டுமில்லை, இறந்துபோனவர்களின் பெயர்களில் எல்லாம் நோட்டீஸ் வரவும் பலர் டென்ஷன் ஆகிவிட்டனர்.

அலட்சிய பதில்
இதுகுறித்து, திருவாடானை எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரிடம் சம்பந்தப்பட்டவர்கள் சென்று கேட்டார்களாம். அதற்கு அவர், இது குழு லோன் என்றாராம். அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு, "நீங்க லோன் வாங்கலைதானே? அப்படின்னா அந்த நோட்டீசை தூக்கி போட்டுட்டு பேசாமல் இருங்க" என்று அலட்சியமாக பதில் சொல்கிறாராம்.

ரிசர்வ் வங்கி
இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்க போறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் நோட்டீஸ் தொடர்ந்து பலருக்கு வந்து கொண்டே இருக்கிறதாம்!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications