இந்தக் காலத்தில் இப்படி ஒரு கிராமமா...? ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழும் மக்கள்
Recommended Video
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மதுவுக்கும், வரதட்சனைக்கும் முன்னோர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட தடை காலம் காலமாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதனால் அந்தக் கிராமம் ஒழுக்கத்தின் உயர்விடமாக திகழ்வதோடு மற்ற ஊர்களுக்கும் முன்னோடி கிராமமாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறது.
மதுவில்லா, வரதட்சனையில்லா அந்தக் கிராமத்தில் பெண் கொடுப்பதற்காக ஆலவிளாம்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் போட்டி போடுகின்றனர்.

விவசாயம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ளது ஆலவிளாம்பட்டி என்ற அற்புத கிராமம். இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் விவசாய தொழிலையே பூர்வீகமாக கொண்டிருக்கின்றனர்.

மனக்கட்டுபாடு
ஆலவிளாம்பட்டி கிராம மக்கள் ராமசுவாமி மற்றும் பொன்னழகி அம்மாளை இஷ்ட தெய்வங்களாக பல நூற்றாண்டுகளாக வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி வழிபடும் அவர்கள் மது அருந்தமாட்டோம் என்றும், வரதட்சனை பெற மாட்டோம் எனவும் சத்தியம் செய்து கொடுத்ததாகவும், அந்த சத்தியத்தை பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பின்பற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.

வரதட்சனைக்கு தடை
ஆலம்விளாம்பட்டி கிராமத்தில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை எந்தக் குடும்பத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதில்லை என்றும், வரதட்சனை கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் அந்தக் கிராமமக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

ஒழுக்கம்
இந்தக் கிராமத்தில் பெண் கொடுப்பதற்காக பெரிய போட்டியே நடக்கிறதாம். காரணம் இளைஞர்கள் யாருக்கும் மதுவாசமே தெரியாது என்பதாலும், வரதட்சனை பிரச்சனை இல்லை என்பதாலும் அங்கு வாக்குப்பட்டு போக சுற்றுப்பட்டு கிராம இளம்பெண்கள் விரும்புகிறார்களாம்.

அச்சம்
ஊர் விதியை மீறி யாரேனும் மது அருந்திவிட்டு வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் அவர்களை பிடித்து வைத்து கிராம மக்கள் சார்பாக தண்டனை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக வெளியூர்க்காரர்கள் கூட மது அருந்தாமலேயே ஆலவிளாம்பட்டி கிராமத்திற்குள் நுழைகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications