இன்னும் 2 வருஷத்தில் பாருங்கள்.. தமிழகத்தில் மிக முக்கிய மாற்றம் ஏற்படும்.. வேலூர் இப்ராஹிம் சூசகம்
சிவகங்கை: இன்னும் இரு ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய மாற்றம் நடைபெறுகிறது என பாஜக தேசிய சிறுபான்மையின பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறுகையில் அனைத்து சமூக மக்களையும் மதங்களையும் சமத்துவமாக நேசிக்கக் கூடிய கட்சி பாஜக. இஸ்லாமியர்களை அரவணைத்துதான் இந்த தேசத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கையாக உள்ளது.

கொள்கை
இந்த கொள்கையை பாஜகவும் கொண்டிருக்கிறது. மத நல்லிணக்கத்திலும் தேச முன்னேற்றத்திலும் தேசிய நீரோட்டத்தில் இஸ்லாமியர்களையம் இணைத்து தான் செயல்பட வேண்டும். இதற்காகவே பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ரூ 5100 கோடியை சிறுபான்மையின மக்களின் கல்விக்காகவே ஒதுக்கியுள்ளார்.

இஸ்லாமிய வாக்கு வங்கி
இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாத வன்முறையாளர்களாகவும் மாற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா செய்து வருகிறது. இஸ்லாமியர்களை கல்வி கற்க விடாமல் இந்த அமைப்புகள் இடையூறு செய்கின்றன.

இந்து தலைவர்கள்
மேலும் இந்து தலைவர்கள் மீதும் இந்துத்துவா கொள்கைகளையும் சித்தாந்தங்ளையும் பேசுபவர்கள் மீதும் இந்த அமைப்புகள் குறி வைக்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும். இதை மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ சோதனைகளால் இஸ்லாமிய மக்களுக்கு எந்த வித பின்னடவும் கிடையாது. இஸ்லாமியர்கள் பாஜகவின் நோக்கத்தையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டு அவர்களாகவே இணைந்து வருகிறார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு காவல் துறை மூலம் எங்களை நெருங்குகிறது.

இந்துக்களின் நம்பிக்கை
இந்துக்களின் நம்பிக்கையை இழிவுப்படுத்தக் கூடிய செந்தில் குமார் எம்பி, ஆ ராசா எம்பி போன்றோருக்கு திமுக அரசு ஊக்கம் கொடுத்து வருகிறது. விரைவில் ஜனநாயக ரீதியாக அவர்களை திருப்பி அடிக்கக் கூடிய வேலையை பாஜக செய்யும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்திலும் தேசிய அளவிலும் பாஜக இடம் பிடிக்கும். வரும் தேர்தல் நாடாளுமன்றத்திற்கானது மட்டுமல்ல தமிழக சட்டசபைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தப்படும் என்றார் இப்ராஹிம்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications