எல்லா புகழும்.. ஜித்தேஷ் சர்மாவை வாங்க அடம்பிடித்த டிகே.. ஆர்சிபி கேப்டன்சி கிடைத்ததும் அப்படிதான்!
லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கேப்டன் ஜித்தேஷ் சர்மா இருந்தாலும், பின்னணியில் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ஆர்சிபி அணியால் குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு முன்னேற முடியும். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது.

ஜித்தேஷ் சர்மா ஆட்டம்
பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்து வென்றுள்ளது. ஆர்சிபி வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸிங் செய்து வென்றது இந்தப் போட்டியில்தான். விராட் கோலி ஆட்டமிழந்த பின் ஆட்டம் லக்னோ அணியின் கைகளில் சென்றதாக பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா புயலை போல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறந்த இன்னிங்ஸ்
33 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 85 ரன்களை விளாசி தள்ளினார். ஜித்தேஷ் சர்மாவின் ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இன்னிங்ஸ் இதுதான். இதன் மூலமாக ஆர்சிபி அணியின் நம்பிக்கை உச்சத்திற்கு சென்றுள்ளது. 17 ஆண்டுகளாக மிஸ்ஸான கோப்பை, 18வது ஆண்டில் நிச்சயம் கிடைக்கும் என்று அந்த அணியின் வீரர்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அடம்பிடித்த தினேஷ் கார்த்திக்
இதற்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் தொடக்கம் முதலே ஜித்தேஷ் சர்மா கட்டாயம் ஆர்சிபி அணியில் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். மெகா ஏலம் முடிவடைந்த பின், ஜித்தேஷ் சர்மாவுடன் அதிக நேரம் செலவிட்டு, அவரின் ஆட்டத்தை மாற்றி இருக்கிறார்.
கேப்டன்சியும் அப்படிதான்
இன்னும் சொல்லப் போனால் நேற்றைய ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா ஆடிய பெரும்பாலான ஷாட்கள், தினேஷ் கார்த்திக்கின் ஷாட்களை போல் அமைந்திருந்தது. அதேபோல் ரஜத் பட்டிதார் காயம் காரணமாக ஓய்வில் இருக்க வேண்டிய தேவை வந்த போது, அனைவரும் புவனேஷ்வர் குமார் தான் கேப்டனாக இருப்பார் என்று நினைத்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக் ஜித்தேஷ் சர்மா முன்னிறுத்தினார்.
மயங்க் அகர்வாலின் வரவு
இன்னும் சொல்லப் போனால் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட போதே, ஜித்தேஷ் சர்மா ஆர்சிபி அணிக்கு தலைமை தாங்கப் போகும் செய்தியை கூறி இருந்தார். அதேபோல் தேவ்தத் படிக்கல் காயம் காரணமாக விலகிய போது மாற்று வீரராக மயங்க் அகர்வாலை கொண்டு வந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய சாதகத்தை அளித்திருக்கிறது.
எல்லா புகழும்
குறிப்பாக விராட் கோலி இல்லையென்றாலும், ஆர்சிபி அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. விராட் கோலியை மட்டுமே நம்பி ஆர்சிபி அணி இல்லை என்ற சூழலை ஒரேயொரு சீசனிலேயே தினேஷ் கார்த்திக் உருவாக்கி இருக்கிறார். இதனால் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு சென்றால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications