மே 18: மாபெரும் தமிழர் ஒன்றுகூடல்- வடக்கு,கிழக்கு மாகாண தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி!
வல்வெட்டித்துறை: தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழர்கள் இன்று பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

தமிழருக்கான தமிழீழ தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதி யுத்த நாட்களில் பல லட்சக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

உலகம் முழுவதும் தமிழர்களால் மே 18-ந் தேதி இனப்படுகொலை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தமிழ்நாடு உட்பட தமிழர்கள் வாழும் நிலம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக முள்ளிவாய்க்கால் பொதுக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2009-ல் ஈழத் தமிழினத்தை துடிக்க துடிக்க துடைத்து அழித்து ஒரு இன அழிப்பை சிறிலங்கா அரசு கொடூரமாக மேற்கொண்டது. சர்வதேசம் தடை செய்த ஆயுதங்களை இலங்கை அரசு தமிழருக்கு எதிராக பயன்படுத்தியது. இதனை நினைவுகூற மே 18-ந் தேதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுவோம். மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி பரிமாறுவோம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டி துறை இல்லத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி ஒரு குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் கிழக்கு மாகாணம் பொத்துவில்லில் இருந்தும் தமிழர் தாயக நிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழர்கள் புறப்பட்டு சென்றனர். முள்ளிவாய்க்காலில் மே 18-ந் தேதி தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளனர். இலங்கை ராணுவம், போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications