இலங்கை தேர்தல்...நள்ளிரவு நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை
கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாக முடிவடைந்ததையடுத்து, தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு- 5,932 வாக்குகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்- 1,290 வாக்குகள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- 708 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

இதே போன்று வடக்கு மாகாண பகுதிகளான யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில், தபால் வாக்குகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 29,565 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சி -21,187 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 4,711 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
ஹம்பன் தோட்டா மாவட்டத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அக்கட்சி ஐக்கிய - 8,441 வாக்குகளும், ஐக்கிய தேசிய கட்சி -5,955 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 2,401 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
காலே மாவட்ட தபால் வாக்கு எண்ணிக்கையில், ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி -33,798 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 19,613 வாக்குகளும்,, மக்கள் விடுதலை முன்னணி- 4,777 வாக்குகளும் பெற்றுள்ளன.
திரிகோணமலை மாவட்ட தபால் வாக்கு எண்ணிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி -5,215 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 2,894 வாக்குகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பு- 2,099 வாக்குகளும், மக்கள் விடுதலை முன்னணி- 301 வாக்குகளும் பெற்று முன்னணியில் உள்ளன.
சிங்களர்கள் வாழும் பெரும்பாலான மாவட்டங்களில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி தபால் வாக்குகளில் முன்னணியில் உள்ளது. 2 வது இடத்தில் ராஜபக்சே போட்டியிடும் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி உள்ளது.
இன்றுகாலை வாக்கு எண்ணிக்கையின் முழு நிலவரம் வெளியிடப்பட்டு வெற்றி பெறுவது யார் என அறிவிப்பு வெளியாகும்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications