மூன்றாவது முறையாக பதவி ஏற்க முடியுமா?- நீதிமன்றத்திடம் கருத்து கேட்கும் ராஜபக்சே
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிட தடை ஏதும் உள்ளதா என, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து கேட்டுள்ளார்.
இதுகுறித்து ராஜபக்சே உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், மீண்டும் அவர் அதிபர் பதவியை ஏற்பதற்குத் தடையாக, சட்டச் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இம்மாதம் 10-ஆம் தேதி, அல்லது அதற்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு கோரியுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சேவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், ஒரு ஆண்டுக்கு முன்னரே அவர் அதிபர் தேர்தலை நடத்த விரும்புவதாகத் தெரிகிறது.
தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் நவம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
அந்தத் தேர்தலில் ராஜபக்சே மீண்டும் போட்டியிட முடியாது என எதிர்க் கட்சிகள் கூறிவரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் கருத்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications