உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்!
உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
சிட்னி: உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.
திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள்.
ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன.

சிட்னி போட்டோகிராபர்
தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.

அதிசயம்
"எனக்கு வார்த்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம்

ராட்சச நீலத்திமிங்கலம்
நிகழ்ந்தது. எனக்கு முன்னாள் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30 அடி இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்", என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

3வது முறை
சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மலைப்பு
இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications