ஜெட் வேகம்! திருப்பூர் மாவட்டத்தில் 18 பார்களுக்கு அதிரடியாக சீல்.. ஆய்வுக்குப் பிறகு பரபர ஆக்ஷன்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனியார் பாரில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை எனக் கூறி அந்த பாரின் உரிமம் 90 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூட உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களில் மாவட்ட மேலாளர் ஆய்வு செய்து வந்தார். இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து திருப்பூர் மாவட்டத்தில் முறையாக அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய மதுக்கூடங்களை கணக்கெடுக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 18 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அமைத்த சிறப்பு குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 4 சிறப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம், அவினாசி, பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications