தமிழகத்தில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி 18 பேர் பலி!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி 18 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர்.
உளுந்தூர்பேட்டை அருகே பாதூரில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பலியான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் இருந்து சேலத்துக்கு இறப்பு வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நடைபெற்றது. இதேபோல் திருப்பூர் உட்பட தமிழகத்தில் பல இடங்களில் இன்று மட்டும் நடைபெற்ற விபத்துகளில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உளுந்தூர்பேட்டையில் விபத்தைத் தடுக்க தவறிய போலீசார் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications