பழனி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி : வைகோ வேதனை
பழனி: பழனி - உடுமலைபேட்டை சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். அந்த வழியாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சம்பவ இடத்தை நேரில் பார்த்தபோது வேதனை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீர் கொண்டு வர ஏதுவாக அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 10 வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அத்திகடவு- அவினாசி கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் காரில் சென்றார்.

இந்நிலையில், நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு விட்டு காரில் சென்றுக்கொண்டிருந்தார்.இந்த சம்பவம் அவர் சென்ற சாலையில் நடந்ததால் உடனடியாக காரை நிறுத்தி விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உடனடியாக இறந்தவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தார்.












Click it and Unblock the Notifications