திருச்சி அகதிகள் தற்கொலை முயற்சி விவகாரம்... 2 அகதிகள் கைது
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள 23 பேர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையை இலங்கை தமிழர்கள் 31 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் தங்கள் மீதான குற்ற வழக்குளை விரைந்து விசாரித்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 15 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 4வது நாளாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவர்களில் 23 பேர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 5வது நாளான நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்த ஈழ நேரு, ஞானஉதயன், சந்திரகுமார், ஸ்ரீஜெகன், மகேஷ்வரன், சிவனேஷ்வரன், ராஜேந்திரன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மருத்துவக் குழுவினர், அவர்களது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி திருச்சி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்தவமனையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த 7 பேரும் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரைகளை சாப்பிட்டு இருப்பதை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர். இவர்கள் தவிர மற்ற 19 பேர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து தற்போது ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளரான ஈழ நேரு, கருணைராஜா ஆகியோரை நேற்றுக் கைது செய்தனர். அகதிகளை போராட தூண்டியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி நீதித்துறை 2வது நீதிபதி நீதிபதி ராஜாராம் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications