வாழவழியில்லை கருணைக் கொலை செய்யுங்கள்... 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனுஅளித்த கொடுமை!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் 28 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கருணைக்கொலை செய்துவிடும்படி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூரில் கருணைக்கொலை செய்யக்கோரி 28 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். வாழ வழியில்லை என்றும், தங்களை கருணைக்கொலை செய்திடுமாறும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்து உள்ள வல்லம்பேடு குப்பம் என்ற மீனவ கிராமத்தில் சுமார் 140 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தகிராமத்தில் தற்போது கிராம கட்டுப்பாட்டு தலைவராக இருக்கும் எல்லப்பனுக்கும், இதற்கு முன்பு அந்த பொறுப்பில் இருந்த சத்திரத்தான் என்பவருக்கு மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

கோயில் நிதி முறைகேடு தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல் முற்றி கடந்த 2016ம் ஆண்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் வல்லம்பேட்டில் பதற்றம் நிலவியது. தொடர்ந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் கோஷ்டி மோதல் தொடரும் நிலையில் ஒரு பிரிவினரை ஊருக்குள்ள செல்ல அனுமதிக்காமல் எதிர் பிரிவினர் பிரச்னை செய்வதாக தெரிகிறது.
மீன்பிடி தொழில் செய்து வரும் தாங்கள் எத்தனை நாட்கள் ஊருக்குள் செல்லாமல் நாட்களை கடத்துவது என்று பாதிக்கப்பட்ட மற்றொரு பிரிவினர் கேட்கின்றனர். இந்நிலையில் கருணைக்கொலை செய்யக்கோரி 28 குடும்பங்களை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். வாழ வழியில்லை என்றும், தங்களை கருணைக்கொலை செய்திடுமாறும் ஆட்சியர் சுந்தரவல்லியிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications