மகாமகத் திருவிழா: தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வரும் 22- ல் பொது விடுமுறை அறிவிப்பு
சென்னை: கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 22-ந் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமக பெருவிழா, பிப்ரவரி13-ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமக தீர்த்தவாரி, பிப்ரவரி 22-ம் தேதி, பிற்பகல் 12 மணிக்கு மேல், 1.30 மணிக்குள் நடக்க உள்ளது.

வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளா போல் கும்பகோணம் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆன்மீக திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கும்பகோணம் மகாமகத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவித்து தமிழக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications