சத்தியமங்கலத்தில் 15 அடி ஆழ தோட்டத்து கிணற்றில் விழுந்த 3 யானைகள் மீட்பு
கிணற்றில் விழுந்த 3 யானைகள் உயிருடன் மீட்கப்பட்டன.
Recommended Video

ஈரோடு: 15 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 யானைகள் ஈரோட்டில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான புலி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் அவ்வப்போது மலைகிராமங்களில் நுழைவது வாடிக்கை.

இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி கானக்குந்தூர் குருசாமி என்பவரின் தோட்டத்து கிணற்றில் 3 பெண் யானைகள் விழுந்து உயிருக்கு போராடின. வனத்தை ஒட்டியுள்ள தோட்டத்தில் இரை தேடி வந்த யானைகள் புதர் மண்டி கிடந்த தரை மட்ட கிணற்றில் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் விழுந்தன.
தகவலறிந்த கிராமமக்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 15 அடி கிணற்றில் விழுந்த யானைகளை மீட்கும் நடவடிக்கையை தொடங்கினர். பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கிணற்றின் கரைகள் வெட்டி எடுத்து பாதை ஏற்படுத்தப்பட்டது.
இதனையடுத்து யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் இருந்து வெளியே வந்து வனத்திற்குள் சென்றது. சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 யானைகளும் கிராமமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications