For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடமிருந்து ரூ.1.50 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த பெண் பயணியிடம் இருந்து, 4.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம்போல சோதனையை நடத்தினர்.

4.25 kg gold seized at Chennai airport

அப்போது ஒரு பெண்மணி மறைத்து வைத்திருந்த சுமார் 4.25 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அன்த பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா ரஸ்யம் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் அவ்வப்போது தங்கங்கள் பறிமுதல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
In a huge haul, about 4.25 kilograms of smuggled gold, worth more than 1.50 crore in the international market, was seized by custom officials at Chennai airport on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X