ஓமைகாட், தமிழக பெண்களில் பாதிப்பேருக்கு ரத்தசோகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வசிக்கும் பெண்களில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு ரத்த சோகை இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவு சுகாதார கணக்கெடுப்பின்படி 2013-2014ம் ஆண்டில் தமிழகத்தில் வசிக்கும் பெண்களில் 49.2 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்கள் ஆவர்.

ரத்த சோகை உள்ள பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்த சோகை

ரத்த சோகை

1998-1999ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 56.5 சதவீத பெண்களுக்கு ரத்த சோகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது

அந்த சதவீதம் 49.2 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடியாக ஒன்றும் குறையவில்லை.

பெண்கள்

பெண்கள்

மாவட்ட அளவிலான கணக்கெடுப்பின்படி 10 முதல் 19 வயது வரையிலான பெண்களில் 4.46 சதவீதம் பேருக்கும், கர்ப்பிணிகளில் 56 சதவீதம் பேருக்கும், 16 மாதங்கள் முதல் 3 வயது வரை உள்ள பெண் குழந்தைகளில் 60 சதவீதம் பேருக்கும் ரத்த சோகை இருப்பது தெரிய வந்துள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதையே ரத்த சோகை என்கிறோம். ரத்த சோகையால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதுடன் பெரியவர்களுக்கும்

உடல்நலப் பிரச்சனை ஏற்படும். ரத்த சோகையால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பலியாகின்றனர்.

மரணம்

மரணம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 1000 பெண்கள் பிரசவத்தின்போது மரணம் அடைகின்றனர். அதில் 200 பேர் ரத்தசோகையால் பலியாகின்றனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

ஆண்களுக்கு தினமும் 17 மில்லிகிராம் இரும்புச்சத்தும், பெண்களுக்கு 21 மில்லிகிராமும், கர்ப்பணிகளுக்கு 35 மில்லிகிராமும், குழந்தைகளுக்கு 9 முதல் 16 மில்லிகிராமும், பதின்வயது சிறுமிகளுக்கு 26 முதல் 28 மில்லிகிராம் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது.

கறி, காய்கறிகள்

கறி, காய்கறிகள்

ஆட்டுக்கறி, கீரை வகைகள், முட்டை, பருப்பு, பாதாம், எலுமிச்சை, ஆரஞ்சு பழம் ஆகியவை சாப்பிடுவதால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கிறது.

அரசு

அரசு

ரேஷன் கடைகளில் அரசியை தான் வழங்குகிறார்கள். ஆனால் பருப்பு வகைகளை வழங்கினால் அது மக்களுக்கு நல்லது. மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகம் என்று உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் ஆர். ருக்மணி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+