திண்டிவனம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து... 5 பேர் பலி; 10 பேர் படுகாயம்!!
திண்வனம்: திண்டிவனம் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். தொழிற்சாலை கொழுந்துவிட்டு எரிவதால் உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
திண்டிவனம் வானூர் அருகே துருவை என்ற கிராமம் உள்ளது. அங்கே ஒரு தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பதால் பட்டாசு தொழிற்சாலையில் வேலைகள் வேகமாக நடந்து வந்திருக்கின்றன.

இந்நிலையில், திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலைக்குள் 35 பேர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 10 பேர் படுகாயம் அடைந்து பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பட்டாசு விபத்தையடுத்து இந்த ஆலையின் மேற்கூரை இடிந்து விழுந்து தரைமட்டமாக ஆகியிருக்கிறது. இந்த ஆலையை ரமேஷ் என்பவர் நடத்தி வருகிறார். அவர் முறைப்படியான உரிமம் பெற்று இந்த ஆலையை நடத்தி வருகிறாரா இல்லையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், வருவாய் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பட்டாசு ஆலை வயல் வெளியின் மையப் பகுதியில் இயங்கி வந்ததால் வெடி விபத்தால் பொது மக்களுக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. எனினும் துருவை கிராமமே கரும்புகையால் சூழப்பட்டிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications