நெல்லை அருகே கார் விபத்து... சம்பவ இடத்திலேயே 4 பேர் சாவு
நெல்லை அருகே சொகுசு கார் விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லை: வள்ளியூரில் சாலையின் தடுப்புச்சுவரில் சொகுசு கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லை வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை சொகுசு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த சாம் பெலிக்ஸ், ஜஸ்டின் பால்ராஜ், சுனில், ஜெபிட் ஆகிய பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 4 பேரும் நண்பர்களா அல்லது உறவினர்களா என விசாரித்து வருகின்றனர். மேலும் குடிபோதையில் காரை ஓட்டி வந்தனரா அல்லது அதிவேகமாக வந்ததால் விபத்து நேரிட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications