அடக் கொடுமையே! இதுக்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவாங்க? - வீடியோ

வீட்டுக்குள் ஆடு புகுந்ததால் கோபமடைந்த பாண்டியன் என்பவர் அதனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதனால் போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

தேனி: பெரியகுளத்தில் ஆடு வீட்டுக்குள் புகுந்த காரணத்தால் அதை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கண்ணன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவருடைய ஆடு ஒன்று பாண்டியன் என்பவரது வீட்டில் நுழைந்துள்ளது. ஏற்கெனவே இதுபோல் பலமுறை நுழைந்த போது பாண்டியன் விரட்டியடித்துள்ளார்.

A house owner shot goat by anger

சம்பவத்தன்று ஆடு நுழைந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் ஆட்டை சுட்டுள்ளார். அதில் ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. அதையடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.

மேலும், பாண்டியனிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+