தி.நகர் லாட்ஜில் பிணமாக கிடந்த நெதர்லாந்த் பெண் லிண்டா: உடன் தங்கியிருந்தது யார்? போலீஸ் விசாரணை
Recommended Video

சென்னை: தி நகர் லாட்ஜில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்தவர் லிண்டா. இவர் கடந்த 27-ம் தேதி தி.நகர் வெங்கடேசன் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், தாம் பத்திரிகையாளர் என அறிமுகம் செய்துக்கொண்டு தங்கியுள்ளார்.
நேற்று அவர் அறையை காலி செய்வதாக விடுதி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் அறையை காலி செய்யவில்லை. அறையை திறக்கவும் இல்லை.

மர்ம மரணம்
இதையடுத்து நேற்று இரவு ஊழியர்கள் அவரது அறையை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது லிண்டா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ரசாயன பவுடர்
இதுகுறித்து மாம்பலம் போலீசில் விடுதி ஊழியர்கள் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் விசாரித்ததில், அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகில் ரசாயன பவுடர் இருந்துள்ளது.

போலீஸ் சந்தேகம்
அதை உட்கொண்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யார் தங்கியிருந்தது?
நெதர்லாந்து தூதரகம் சென்னையில் இல்லாததால், டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கு மாம்பலம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை தியாகராயர் நகரில் அவருடன் வேறு யாராவது தங்கியிருந்தார்களா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications