திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகன்.. ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

நாமக்கல் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நமாக்கல் அருகே திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் வீசாணம் ஒட்டக்குளம் புதூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் 28 வயதான மகன் சசிக்குமார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

A son gets life time prison for killing father

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு சசிக்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தந்தை பழனிச்சாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பழனிச்சாமி பெயரில் உள்ள நிலத்தை தன்பெயரில் மாற்றித்தரும்படியும் அவர் கேட்டுள்ளார்.

இதற்கு பழனிச்சாமி மறுத்ததால் ஆத்திரமடைந்த சசிக்குமார் கொடுவாலால் பழனிச்சாமியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சசிக்குமாரை கைதுசெய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி இளவழகன், குற்றம்சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிக்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+