சென்னை முகப்பேர் நீச்சல் குளத்தில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாப பலி!
சென்னை முகப்பேர் நீச்சல் பயிற்சி மையத்தில் உள்ள குளத்தில் மூழ்கிய 8 வயது சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை முகப்பேர் நீச்சல் பயிற்சி மைய குளத்தில் மூழ்கிய 8 வயது சிறுமி பரிதபாமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் சிறுவர். சிறுமியரை நீச்சல், பாட்டு, இசை, கணினி, ஓவியம் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு பணம் செலுத்தி அனுப்பி வருவதில் பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அங்கு பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து அவர்கள் ஆய்வு செய்வது கூட இல்லை. அதன் விளைவு முகப்பேரில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பழக வந்த 8 வயது சிறுமி ஆண்டிரியா இன்று நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்துவிட்டார்.
2-ஆம் வகுப்பு படித்து வந்தார் ஆண்டிரியா. இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications