நிலம் அபகரிக்க முயற்சி: அதிமுக மாஜி பெண் கவுன்சிலர் கயல்விழி கைது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக திருச்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் கயல்விழி கைது செய்யயப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியை சேர்ந்தவர் கயல்விழி சேகர். அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்தது.

மேல அம்பிகாபுரத்தைச் சேர்ந்த சையது முகமது என்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலாரான கயல்விழி சேகர் தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து கயல்விழி சேகரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications