சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியா.. துர்திருஷ்டம்... ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வேதனை
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவிற்கு கொடுக்க நினைப்பது துர்திருஷ்டவசமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி கொடுப்பது என்பது துர்திருஷ்டவசமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா வேதனை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அதிகார குவிமையமாக விளங்கும் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு பிறகு சசிகலாவிற்கு செல்லவிருக்கிறது. ஜெயலலிதா இறந்த உடன் யார் அந்த பதவியில் அமர வைப்பது என்ற பிரச்சனை அதிமுகவில் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு வகையான ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு நேற்று முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனை ஒருநாளும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் இது துர்திருஷ்டமான முடிவு என்றும் கூறியுள்ளார். "சசிகலாவை என் அத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியே வைத்திருந்தார். மேலும், சசிகலா என் அத்தைக்கு தெரியாமல் பல விஷயங்களை செய்திருக்கிறார். இதனால் என் அத்தை சசிகலாவின் மேல் கோபமடைந்தார். அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
எனினும், அதிமுகவின் எதிர்காலம் குறித்து கட்சியில் இருப்பவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் தீபா ஜெயகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications