தீர்ப்பு வரும்வரை விடாம சாமி கும்பிடுங்க.. தொண்டர்களுக்கு அதிமுக மேலிடம் உத்தரவு!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை தொடர வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து கடந்த செப்டம்பரில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. உடன் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆத்திரமடைந்த அ.தி.மு.க தொண்டர்கள் மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

எனவே போராட்டங்களை கைவிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தும்படி தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. அதை ஏற்று கட்சியினர் கோவில்களை நோக்கி படையெடுத்தனர். தேவாலயம், மசூதி என அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு ஜாமின் வழங்க சிறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் தங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார். இதில் விவாதம் முடிந்து தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலை உள்ளது.
தீர்ப்பு எப்போது வரும் என்பது தெரியாததால் கட்சியினர் அனைவரும் திக் திக் திக் மனதுடன் உள்ளனர். தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை நடத்தும்படி ஏற்கனவே அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டிருந்தது. தற்போது தீர்ப்பு வரும் வரை வழிபாடுகளை தொடரும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளதாம்.
இதனால் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் யாகம் நடத்துவது, பால் குடம் எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, கோ பூஜை நடத்துவது, இலவச திருமணம், கோ தானம் என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.
யாகங்களை பிரம்மாண்டமாக நடத்துவதில் அமைச்சர்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது. ஒவ்வொருவரும் பிரம்மாண்டமாக யாகம் நடத்தி அதன் புகைப்படங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
யாகங்கள் களை கட்டி வருவதால் எங்கு பார்த்தாலும் ஒரே புகைமூட்டமாக உள்ளது என்று கூறும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications