ஜெயலலிதா ஜாகதத்தை வைத்து அண்ணா சாலை தர்காவில் சிறப்பு பிரார்த்தனை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரி அவரது ஜாதகத்தை வைத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
நேற்று இரவு இந்த சிறப்புப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. அண்ணா சாலையலி் உள்ள தர்காவில் நடந்த இந்த பிரார்த்தனையின்போது "மக்களின் முதல்வர்" ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு அவரது ஜாதகத்தையும் வைத்து பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு அதிமுகவைச் சேர்ந்த நடிகர் வாலி என்கிற பஷீர் ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான அதிமுகவினரும் இந்த சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே ஐயப்ப பக்தர்கள் ஜெயலலிதாவின் படத்தை இருமுடியோடு சுமந்து சென்ற நிலையில் இப்போது தர்காவில் ஜெயலலிதா ஜாதகத்தை வைத்து பிரார்த்தனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பால்குடம், காவடி எல்லாம் குறைந்து இப்போது இதுபோல வித்தியாசமாக செய்ய ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.