ஓவர் டூ நெல்லை: இன்று சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு

Subscribe to Oneindia Tamil

AISMK's conference at Nellai
நெல்லை: நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இதனால் நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் இப்போதே வேலையை தொடங்கி விட்டன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பொது கூடடஙகளையும், மாநாடுகளையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று நெல்லை பொருட்காட்சி திடலில் நடக்கின்றது.

இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமக நிர்வாகிகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். மாநாடு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தமிழ் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு அவை தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். மாநாட்டின் நிறைவில் சரத்குமார் எம்எல்ஏ பேசுகிறார். மாநாட்டை முன்னிட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகள், கொடிகள், தோரணங்களால் மின்னுக்கின்றன.

விழா தொடங்குவதற்கு முன் ஓயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம் உள்பட அனைத்து கிராமிய கலைக நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு ஜோதிகள் கொண்டு வரப்படுகின்றன.

மாநாட்டில் நாடாளுமன்ற தேர்தல், காமராஜர் மணிமணடபம் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மாநாட்டிற்கு சென்னையி்ல் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் தனி ரயிலில் வந்து கொண்டிருக்கின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வாகனங்களில் குவிய தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+