"என்னையா ஆண்மை இல்லாதவன்னு சொன்னே?.. இதைப் பாரு".. மனைவிக்கு 'ஷாக்' கொடுத்த கணவன்!
மனைவியை பழிவாங்க, உறவுகார பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய கணவர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: ஆண்மை இல்லாதவர் எனக் கூறியதால், மனைவியை பழிவாங்குவதற்காக விபரீத செயலில் ஈடுபட்ட கணவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தை சேர்ந்தவர் விபாவசு. இவருக்கும் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 15 நாட்களிலேயே அனுஷா சென்னைக்கு வந்துவிட்டார். இருவரையும் சேர்த்து வைக்க இரு குடும்பத்தினர் முயற்சித்தும் அது வீணானது.
ஆண்மை இல்லாதவர்
இதனிடையே விபாவசுவிடம் விவாகரத்து கேட்டு அனுஷா மனு செய்திருந்தார். அந்த மனுவில் தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தை தன் வீட்டிலும் அனுஷா கூறினார். இதனால் அனுஷா குடும்பத்தாரும் அடிக்கடி விபாவசுவை ஆண்மை இல்லாதவன் என இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
விபரீத முடிவு
இதனால் ஆத்திரமும் அவமானமும் அடைந்த விபாவசு, ஆண்மையுள்ளவன் என்பதை நிரூபிக்க விபரீத முடிவு எடுத்தார். அதன்படி வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டார். அதனை ஒரு வீடியோவாக எடுத்து, அதனை அனுஷாவின் அப்பாவுக்கும், அனுவின் உறவுகார பெண்ணுக்கும் அனுப்பி வைத்தார். அதனுடன் "என்னையா ஆண்மை இல்லாதவன்னு சொல்றீங்க?" என்றும் கேட்டிருந்தார்.
குடும்பத்தார் அதிர்ச்சி
அந்த உறவுகார பெண்ணிடம் தகாத முறையிலும் ஆத்திரத்தில் பேசியிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாவின் குடும்பத்தினர், எம்கே.பி நகர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் விபாவசு அனுப்பியதாக கூறப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தனர். உறவுகார பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
புழலில் அடைப்பு
பின்னர் ஐதராபாத் சென்று விபாவசுவிடம் விசாரணை நடத்தினர். அதில், அனுஷாவும், அவரது குடும்பத்தினரும் தன்னை மிகவும் அவமானப்படுத்தி கேவலமாக பேசியதாகவும், அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழலில் அடைத்தனர்.